உள்ளூர் செய்திகள்

வெள்ளத்தால் பாதித்த கிராமங்களுக்கு நிவாரண உதவிகள்

Published On 2022-08-11 10:55 GMT   |   Update On 2022-08-11 10:55 GMT
  • கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட அதிகப்படியான உபரிநீரால் திட்டு கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை, வெள்ளை மணல் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.
  • அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி. பாரதி சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட அதிகப்படியான உபரிநீரால் திட்டு கிராமங்களான முதலைமேடு திட்டு, நாதல் படுகை, வெள்ளை மணல் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையை பாதிக்க ப்பட்ட கிராமங்களுக்கு அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி. பாரதி சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு போர்வை, பிஸ்கட் மற்றும் வயதானவர்களுக்கு வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வழங்கினார்.

அப்போது கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்கள் நற்குணன், சிவக்குமார், நகர செயலாளர் வினோத், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், நிர்வாகிகள் சிவ.மனோகரன், நாகரத்தினம், சொக்கலிங்கம், மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News