உள்ளூர் செய்திகள்

வட்டார வளர்ச்சி குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

Published On 2023-03-31 09:44 GMT   |   Update On 2023-03-31 09:44 GMT
  • குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • தனிமையில் விட வேண்டாம் மற்றும் மாதவிடாய் வேலையில் தாய்மார்கள் கண்காணிக்க வேண்டும்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறையின் மூலமாக வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு பற்றிய விவரத்தை அலுவலர்கள் விளக்கினார்.

அரசு வீதிமுறைகளை கடைபிடித்து சிறுமிகளை கண்காணித்து விழிப்புடன் செயல்பட்டு நல்வழிபடுத்த வேண்டும். எந்த குழந்தைகளும் தவறான பாதையில் செல்லகூடாது. குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தனிமையில் விட வேண்டாம் மற்றும் மாதவிடாயாய் வேலையில் தாய்மார்கள் கண்காணிக்க வேண்டும் என்று கூறினர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாமி, வினோத்குமார், வட்டாரகல்வி அலுவலர்கள் வெங்கட்குமார், ஜார்ஜ், இளநிலை உதவியாளர் விமல்ராம்,வட்டார மருத்துவ ர் வெண்ணிலா, அலுவலர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு உமாசங்கர், சையில் லிங் ஸ்ரீதர், சுமதி, மற்றும் உதவி தொடக்க அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News