உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் வழங்கிய காட்சி.




தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 62 செல்போன்கள் மீட்பு

Published On 2022-08-06 09:18 GMT   |   Update On 2022-08-06 09:18 GMT
  • தென்காசியில் பலரது செல்போன்கள் காணாமல் போனதாக மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பல புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
  • இந்த புகாரை விசாரணை செய்ய கூடுதல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

தென்காசி:

தென்காசியில் பலரது செல்போன்கள் காணாமல் போனதாக மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பல புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரை விசாரணை செய்ய கூடுதல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி, தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செண்பகப்பிரியா மற்றும் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

இதில் தொலைந்த மற்றும் திருடுபோன ரூ.7 லட்சம் மதிப்பிலான 62 செல்போன்கள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் தென்காசியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஒப்படைத்தார்.

மேலும் செல்போன்களை தவறவிட்ட நபர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

பின்னர் சிறப்பாக பணிபுரிந்து செல்போன்களை மீட்டு கொடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரி வித்தார்.

செல்போன்களை பெற்றுக் கொண்ட நபர்கள் மாவட்ட போலீசாருக்கு தங்களின் நன்றியினை தெரிவித்தனர்.

Tags:    

Similar News