உள்ளூர் செய்திகள்
ரேஷன் கடையில் உதவி கலெக்டர் ஆய்வு
- சப்- கலெக்டர் சரண்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- பொதுமக்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட முனீஸ்வரன் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் சப்- கலெக்டர் சரண்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் இருப்பு குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு தனி தாசில்தார் பெருமாள் உடன் இருந்தார்.