உள்ளூர் செய்திகள்
- தனியே வசித்து வந்தார்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியை சேர்ந்த பாலன் மகன் சக்திவேல் (22) என்பவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு பின்பு தனது உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு திருநங்கையாக மாறினார்.
இதனால் வீட்டை விட்டு தனியே வசித்து வந்த சக்திவேல் நேற்று இரவு வசித்து வந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாணாவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.