உள்ளூர் செய்திகள்

தனியார் கம்பெனியில் ரூ.4 லட்சம் பொருட்கள் திருட்டு

Published On 2022-09-30 09:42 GMT   |   Update On 2022-09-30 09:42 GMT
  • 5 ஊழியர்கள் கைது
  • போலீசார் விசாரணை

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் ஊராட்சி பகுதியில் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு புலிவலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30), வன்னியவேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45), வாங்கூரை சேர்ந்த வெங்கடேசன் (63), வாலாஜா கே.கே. நகரை சேர்ந்த தனசேகரன் (53), ஆர்.கே. பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் (52) ஆகியோர் கூலிவேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் நேற்று கம்பெனியில் உள்ள ரூ.4 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி வேனில் ஏற்றி செல்ல முயன்றனர்.

அதனை பாதுகாப்பு பணியில் இருந்த ரமேஷ் என்பவர் கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்து வாகனத்தை சோதனை செய்த போது ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அதில் இருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் பிடித்து கொண்டபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் கொண்டபாளையம் போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News