உள்ளூர் செய்திகள்

குளத்தில் பிணமாக கிடந்த வடமாநில வாலிபர்

Published On 2022-11-17 15:01 IST   |   Update On 2022-11-17 15:01:00 IST
  • தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசாத்திபுரம் பகுதியில் உள்ள குளம் சீரமைக்கப் பட்டு வருகிறது. இந்த குளத்தில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஆற்காடு டவுன் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குளத்தில் கிடந்த உடலை மீட்டனர்.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? என விசா ரணை நடத்தியதில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சலீம் (வயது 32) என் 'பது தெரிய வந்தது.

இவர் குளத்தில் கால் தவறி விழுந் தாரா அல்லது வேறு ஏதே னும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News