உள்ளூர் செய்திகள்

கஞ்சா வழக்கில் கைதான வாலிபர்

Published On 2023-09-16 15:00 IST   |   Update On 2023-09-16 15:00:00 IST
  • குண்டர் சட்டத்தில் கைது
  • மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுகா, பில்லாந்தி, மேல்சீசமங்கலம், கிராமத்தை சேர்ந்த படப்பை விக்கி (எ) விக்னேஷ் (26) என்பவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் படப்பை விக்கி (எ) விக்னேனை போலீசார் கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News