உள்ளூர் செய்திகள்

சிறப்பு மனுநீதி நாள்

Published On 2022-08-04 09:42 GMT   |   Update On 2022-08-04 09:42 GMT
  • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
  • வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பின்னாவரம் ஊராட்சி, சேந்தமங்கலம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் நடைபெற்றது. வருவாய் கோட்டாச்சியர் பாத்திமா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.அரக்கோணம் வட்டாச்சியர் பழனிராஜன் உடனிருந்தார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர் இந்த சிறப்பு மனுநீதி முகாமில் முதியோர் உதவித்தொகை புதிய ஸ்மார்ட் கார்ட் பட்டா மாற்றம் போன்றவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News