உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுதானிய உணவு திருவிழா

Published On 2023-11-30 07:45 GMT   |   Update On 2023-11-30 07:45 GMT
  • கலெக்டர் வளர்மதி தகவல்
  • தானியங்களின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுதானிய ஆண்டு-2023 ஐ முன்னிட்டு பொதுமக்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நாளை முதல் சிறுதானிய உணவுத்திரு விழாவானது பஸ் நிலையங்கள், கல்லூரிகள் மற்றும் பொது மக்கள் கூடும் சந்தைகளில் நடைபெறவுள்ளது.

மேற்படி உணவுத் திருவிழாவில் சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சி பல்வேறு அரசுத்துறைகள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி களில் இடம்பெற்றுள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் சார்பில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் சிறுதானியங்களின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.

இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை சந்தை, 2 -ந்தேதி ஓச்சேரி சந்தை, 4-ந்தேதி நெமிலி சந்தை, 5-ந்தேதி மின்னல் கிராமம்,6-ந்தேதி சோளிங்கர் பஸ் நிலையம், 7-ந்தேதி பாணாவரம் சந்தை, 8-ந்தேதி அரக்கோணம் பஸ் நிலையம், 11-ந்தேதி ஆற்காடு பஸ் நிலையம், 19-ந்தேதிராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் மேலும் நுகர்வோர் மன்றங்கள் செயல்படும் கல்லூரி களிலும் சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெறும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் சிறுதானிய உணவுத்திரு விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளின் பயன்பாடு குறித்து தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News