உள்ளூர் செய்திகள்
ஆற்காட்டில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு
- கலெக்டர் ஆய்வு
- 1,070 பேர் எழுதினர்
ஆற்காடு:
ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று கிராம உதவியாளருக்கான எழுத்து தேர்வில் 1070பேர் எழுதினர். இந்த தேர்வு மையத்தை ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்வு நடைபெற்ற அனைத்து அறைகளையும் பார்வையிட்டார்.
அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஆற்காடு தாசில்தார் சுரேஷ், தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜலட்சுமி, மண்டல துணை தாசில்தார் பாலாஜி, வருவாய் ஆய்வாளர் பாரதி, வி.ஏ.ஓ.சக்கரவர்த்தி மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.