உள்ளூர் செய்திகள்

நெல் அறுவடை எந்திரம் மோதி போலீஸ்காரர் சாவு

Published On 2023-04-17 15:00 IST   |   Update On 2023-04-17 15:00:00 IST
  • வேலையை முடித்து விட்டு திரும்பிய போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்தகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 28). இவர் ராணிப் பேட்டை மாவட்ட ஆயுதப் ப டை போலீஸ்காரரான இவர், ஆயு தப்படை கேண்டீனில் கேஷி யராக வேலை செய்து வந்தார்.

நேற்று இரவு வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டையில் இருந்து ஆற்காடு வந்துள் ளார். பின்னர் அங்கிருந்து கண்ணமங்கலம் நோக்கி சென்

றுள்ளார். நாராயணபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த நெல் அறுவடை எந்தி ரத்திரம் கோபியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம்

அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News