உள்ளூர் செய்திகள்

மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை

Published On 2022-07-01 10:45 GMT   |   Update On 2022-07-01 10:45 GMT
  • நகரசபை கூட்டம் ஏமாற்றத்தை அளிக்கிறது.
  • அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நகர மன்ற கூட்டம் நேற்று நகர மன்ற தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார் கமிஷனர் லதா மற்றும் துணைத் தலைவர் கலாவதி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் இரண்டாவது வார்டு அதிமுக உறுப்பினர் பாபு 36 வார்டுகள் இன் உறுப்பினர்கள் வாட் ஏன் வரிசைப்படி அமர்வதற்கான இருக்கைகள் நகர மன்ற கூட்டத்தில் இல்லாததால் யார் எங்கே அமர்வது என்று குழப்ப நிலை ஏற்படுகிறது.

மேலும் அவரவர் தங்கள் வார்டுகளில் நிலவி வரும் குறைகளை சொல்வதற்கு வாய்ப்புகள் தவறுகின்றது இதை பலமுறை சொல்லியும் செய்யாமல் எழுத்தடிப்பதாக கூறி அதிமுகவினர் நகர நகர மன்ற கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் இருக்கைகள் சரிவர இல்லாததால் மேஜையின் மேல் அமர்ந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால் நேற்று திமுக மற்றும் அதிமுக உறுப்பினர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்காக கமிஷனர் லதா மற்றும் நகர மன்ற தலைவர் லட்சுமி முயற்சி மேற்கொண்டனர்.

பல தொடர்ந்து வாக்குவாத நடைபெற்று வந்ததால் இதனை தொடர்ந்து கூட்டம் முடிவு பெற்றதாக கூறி கூட்டத்தை முடித்துக் கொண்டனர்.

இதனால் நகர மன்ற கூட்டத்திற்கு தங்கள் பகுதியில் நடைபெறும் குறைகளை கூற வந்த வாடு உறுப்பினர்கள் அரக்கோணம் நகர மன்றத்தில் நடைபெற்ற அனைத்துக் கூட்டங்களிலும் ஏதோ ஒரு பிரச்சனை கூறி கூட்டத்தை முடித்து விடுகின்றனர்.

இதனால் தங்கள் வாடுகளில் இருக்கும் குறைபாடுகளை கேட்டு அது தீர்வு காண முடியாமல் தொடர்ந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றோம் என்று வார்டு உறுப்பினர்கள் புலம்புகின்றனர்.

Tags:    

Similar News