உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து மூதாட்டி சாவு

Published On 2022-07-18 09:22 GMT   |   Update On 2022-07-18 09:22 GMT
  • தூங்கிக் கொண்டிருந்தபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த கிழவனம் அருகே உள்ள முத்துக் குமரன் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண் டிருந்தார்.

அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. உடன டியாக அவரை அக்கம்பக்கத்தினர் காமாட்சியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக் காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி காமாட்சி பரிதாபமாக உயிரி ழந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News