உள்ளூர் செய்திகள்

கெங்கையம்மன் சிரசு திருவிழா

Published On 2023-05-31 09:19 GMT   |   Update On 2023-05-31 09:19 GMT
  • அம்மனுக்கு பொங்கல் வைத்தும், அலகு குத்தி நேர்த்தி கடன்
  • பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரினம்

காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கம் பேரூராட்சி, கொண்டாபுரம் பகுதி, கண் ணாங்குளக்கரையில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மதியம் அம்மனுக்கு பொங்கல் வைத்து படைத்தனர். மாலையில் பக்தர்கள் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றினர். இரவு அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News