உள்ளூர் செய்திகள்

பாணாவரம் கொலையில் 5 பேரிடம் விசாரணை

Published On 2022-07-12 14:25 IST   |   Update On 2022-07-12 14:25:00 IST
  • துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்
  • தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துண்டு துண்டாக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மற்றும் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News