உள்ளூர் செய்திகள்
அரக்கோணத்தில் பா.ம.க.வினர் அன்னதானம்
- ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தாசில்தார் அலுவலகம் எதிரே 400 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோ.ஏழுமலை தலைமையில், ராணிப்பேட்டை மாவட்ட (கிழக்கு) மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன், மாவட்ட பொருளாளரும், கைனூர் பஞ்சாயத்து தலைவருமான உமா மகேஸ்வரி, முன்னாள் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், மாவட்ட அவைத் தலைவர் ஜெகநாதன், கவுதம் அரிநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.