உள்ளூர் செய்திகள்
அரக்கோணத்தில் மனித சங்கிலி போராட்டம்
- ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்தது
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
அரக்கோணம்:
அரக்கோணம் தாலுக்கா அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண் டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை தொகுப்பு ஊதி யம், மதிப்பு ஊதியம் ஆகிய வற்றை மாற்றி அனைவருக் கும் வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கவேண்டும், மத்திய அரசில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்,