உள்ளூர் செய்திகள்
- தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 21 அடி உயரத்தில் அஷ்டநாக விஸ்வரூப கல் கருடர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
நேற்று கருட ஜெயந்தியை முன்னிட்டு 21 அடி உயர கருடருக்கு கருட ஹோமம் , சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், அனுமந்த ஹோமம், மகாலக்ஷ்மி ஹோமம் ஆகிய ஹோமங்களுடன், சிறப்பு நவ கலச அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று வாஸ்து நாளை முன்னிட்டு அஷ்டதிக் பாலகர்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் வாஸ்து பகவானுக்கு சிறப்பு ஹோமத்துடன் அபிஷேகங்கள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பீடாதிபதி முரளிதரஸ்வாமிகளிடம் ஆசியும், பிரசாதமும் பெற்று சென்றனர்.