உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

Published On 2023-09-21 10:16 GMT   |   Update On 2023-09-21 10:16 GMT
  • முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்
  • ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி வைத்தனர்

காவேரிப்பாக்கம்:

பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும், ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஷர்மிளா முன்னிலை வகித்தார். சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்னம் கலந்துகொண்டு 225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.

முன்னதாக நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தொடங்கிவைத்தார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் மயூரநாதன், நகர தி.மு.க. செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் குலோத்துங்கன், சாரதி, செந்தமிழ்செல்வன், சகிலா விநாயகமூர்த்தி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து நெமிலி பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்தினம் வழங்கினார்.

இதில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், நகர செயலாளர் ஜனார்த்தனன், நகர இளைஞரணி ராகேஷ் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News