உள்ளூர் செய்திகள்
எரியாத மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- வீட்டிற்கு செல்லும் பெண்களும், மாணவ, மாணவிகளும் அச்சப்படுகின்றன
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம்- அத்திப்பட்டு சாலையில் எரியாத தெரு மின் விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவேரிப்பாக்கம் -அத்திப்பட்டு, திருப்பாற்கடல் சாலையில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்கு பொறுத்தப்ப ட்டுள்ளது. இந்த மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை என கூறப்படுகிறது.
இந்த பகுதியில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் இரவு நேரங்களில் வேலைக்கு சென்று வீட்டிற்கு செல்லும் பெண்களும், மாணவ, மாணவிகளும் அச்சப்படுகின்றன.
எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.