முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கொடி ஏற்றி வைத்தார்
- மழையையும் பொருட்படுத்தாமல் காரில் இருந்து இறங்கி வந்தார்.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பாரதி நகரில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதற்காக நேற்று இரவு வேலூரில் இருந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூட்டுத்தாக்கு அருகில் கட்டப்பட்டுள்ள சிஎம்சி மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் இரவு ராணிப்பேட்டைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.அவருக்கு அமைச்சர் காந்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது லேசான மழை தூரல் இருந்தது.அதையும் பொருட்படுத்தாமல் காரில் இருந்து இறங்கி வந்து ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த தொண்டர்கள் வாழ்த்து கோ–சங்களை எழுப்பினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான ஆர்.காந்தி, திமுக மாநில சுற்றுலா செயலாளர் வினோத் காந்தி, ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகர பொறுப்பாளர் பூங்காவன, நகரமன்ற உறுப்பினர்கள் வினோத், குமார், கிருஷ்ணன், அப்துல்லா மற்றும் திமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.