உள்ளூர் செய்திகள்

பெண் துணி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-12-14 15:37 IST   |   Update On 2022-12-14 15:37:00 IST
  • உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
  • போலீசார் விசாரணை

வாலாஜா:

வாலாஜா கணபதி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது கீதா (48). இவர் தெரு, தெருவாக சென்று துணி வியாபாரம் செய்து வந்தார்.சமீப நாட்களாக இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் நோய் முற்றிலும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கீதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News