உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

Published On 2023-01-28 10:07 GMT   |   Update On 2023-01-28 10:07 GMT
  • வருகிற 30-ந் தேதி நடக்கிறது
  • ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை:

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி திங்கட்கிழமை அன்று மாலை 3 மணியளவில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், ராணிப்பேட்டை, பாரதி நகரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சினைகளை களைத்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Tags:    

Similar News