உள்ளூர் செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

Published On 2023-01-10 09:27 GMT   |   Update On 2023-01-10 09:27 GMT
  • வாலிபர் கைது
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

ராணிப்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன், பூட்டுதாக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் ஆகிய இருவரும் பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பினர்.

சொரையூர்கூட் டுரோட்டில் இரவு 11.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாழப்பந்தல் கிராமத்தை சேர்ந்த விமல் ராஜ் (வயது 25) என்பவர் மணிகண்டன், மகேசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து ஆயிரம் ரூபாயை பறித்து சென்றுள்ளார்.

இது குறித்து மணிகண்டன், மகேஷ் ஆகிய இருவரும் வாழப்பந்தல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விமல் ராஜை நேற்று கைது செய்தனர்.

Tags:    

Similar News