உள்ளூர் செய்திகள்
- நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்டது
- மாணவர்கள் ஏராளமனோர் கலந்துகொண்டனர்
ஆற்காடு:
ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக நடிகர் விவேக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
நிகழ்ச்சியில் நடிகர் விவேக் 61-வது பிறந்தநாளை முன்னிட்டு 610-மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடப்பட்டன.
இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு இந்தியன் ரெட்கிராஸ் துணை தலைவர் ஜெ.லட்சுமணன் ரோட்டரி மாவட்ட தலைவர் பரத்குமார், ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி பள்ளி தாளாளர் பாலாஜி மற்றும் ஏ.பி.ஜே அறக்கட்டளை தலைவர் கோபிநாத் உடன் பள்ளி மாணவர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.