உள்ளூர் செய்திகள்
அரக்கோணத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- கவர்னரை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் மாநில பொது செயலாளர் ராஜ்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காங்கிரசார், அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு தமிழக கவர்னரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அவர் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜம்பு ஜவகர்பால் மஞ்சு மாநிலத் தலைவர் நரேஷ் குமார் தக்கோலம் காங்கிரஸ் தலைவர் காந்தி எட்வின் ராஜ் பரிதா உலகநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.