உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
- உடல்நலக்குறைவால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் , அம்மூர் அருகே உள்ள மேல் வேலம் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா ( வயது 19 ) . இவர் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார் .
இவருக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவி லாவண்யா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .