உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-10-25 15:17 IST   |   Update On 2022-10-25 15:17:00 IST
  • உடல்நலக்குறைவால் பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் , அம்மூர் அருகே உள்ள மேல் வேலம் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா ( வயது 19 ) . இவர் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார் .

இவருக்கு தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவி லாவண்யா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Similar News