உள்ளூர் செய்திகள்

காவிரி கூட்டு குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறும் காட்சி.

காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

Published On 2022-11-06 14:02 IST   |   Update On 2022-11-06 14:02:00 IST
  • பாலாற்றில் வீணாக சென்றது
  • சீரமைக்க பொதுமக்கள் வலியுத்தல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பாலாற்றின் கரையோரமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் செல்லும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் பீறிட்டு வெளியேறி வீணாகி வருகின்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆற்காடு அருகே பாலாற்றின் கரையோரமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வாலாஜாப்பேட்டை, அரக்கோணம், காவேரிப்பாக்கம் ஆகிய முக்கிய நகரங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் முக்கிய பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் பீறிட்டு வெளியேறி வீணாகி வருகிறது. இந்த உடைப்பு காரணமாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

குடிநீர் பற்றாக்குறை பல பகுதிகளில் நிலவி வரும் சூழலில் குடிநீர் வீணாகி வருவதால் இதனை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News