உள்ளூர் செய்திகள்

பஸ் டிரைவருடன் தகராறு செய்த லாரி மெக்கானிக் கைது

Published On 2023-01-19 14:56 IST   |   Update On 2023-01-19 14:56:00 IST
  • வழிவிடாததால் ஆத்திரம்
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

ராணிப்பேட்டைமாவட்டம் ரத்தினகிரியை அடுத்த மாங் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிபாபு (வயது 31), லாரி மெக்கானிக்.

இவர் நேற்று முன்தினம் இரவு மாங் குப்பம் கிராமத்திற்கு மோட் டார் சைக்கிளில் சென்றுள் ளார்.

அப்போது முன்னால் சென்ற பஸ் வழிவிடவில்லை என தெரிகிறது. மாங்குப்பத் தில் உள்ள டாக்டர் குடியி ருப்பு அருகே பஸ்சை டிரைவர் நிறுத்தியுள்ளார்.

அப்போது பஸ் டிரைவர் திருவண்ணாமலை மாவட் டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த மாதவனிடம், ஜோதி பாபு தகராறு செய்துள்ளார்.

இது குறித்து மாதவன் ரத்தின கிரி போலீசில் புகார் செய் தார். அதன் பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து ஜோதிபாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

Tags:    

Similar News