உள்ளூர் செய்திகள்

சரக்கு ரெயில் தடம் புரண்டது

Published On 2023-03-04 09:50 GMT   |   Update On 2023-03-04 09:50 GMT
  • திருத்தணி செல்லக்கூடிய புறநகர் ரெயில் ரத்து செய்யப்பட்டது
  • அதிகாரிகள் விசாரணை

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலை யம் அருகே உள்ள யார்டு பகுதியில் இருந்து கார்கள் ஏற்றி செல்லும் சரக்கு ரெயில் 24 காலி பெட்டிகளுடன் ரெயில் நிலைய பகுதிக்கு வந்தது.

அப்போது திடீ ரென சரக்கு ரெயிலின் கடைசி 2 பெட்டி கள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன. இதை அறிந்த சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தி இது குறித்து அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தடம்புரண்ட சரக்கு ரெயில் பெட்டி களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் அரக்கோணத்தில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு திருத்தணி செல்லக்கூடிய புறநகர் ரெயில் ரத்து செய்யப்பட்டது. மேலும், சரக்கு ரெயில் தடம் புரண்ட தற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Tags:    

Similar News