உள்ளூர் செய்திகள்

தடுப்புச்சுவரில் கார் மோதி வாலிபர் பலி

Published On 2023-01-29 09:38 GMT   |   Update On 2023-01-29 09:38 GMT
  • கட்டுப் பாட்டை இழந்து பாலத்தில் மோதியது
  • போலீசார் விசாரணை

வாலாஜா:

வாலாஜா அருகே நீலகண்ட ராயன்பேட்டை சோளிங்கர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் துர்காபிரசாத் (வயது 33) இவ ருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் தனக்கு சொந்தமான காரை ஓட்டிக்கொண்டு வாலாஜா -சோளிங்கர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த துர்கா பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News