உள்ளூர் செய்திகள்

ெபண்ணின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பியதில் தகராரில் 3 பேர் கைது

Published On 2023-09-12 14:41 IST   |   Update On 2023-09-12 14:41:00 IST
  • காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது
  • போலீசார் விசாரணை

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் ஒச்சேரி அடுத்த ஆயர்பாடி கிராமத்தை சேர்ந்த விஜயன் (வயது 53). இவரின் மகள் பவித்ரா (25) என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சிறுகரும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தின இரவு ஆயர்பாடி கிராமத்தை ேசர்ந்த மணிகண்டன்(32) என்பவர் பவித்ராவுக்கு போனில் குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்புக்கும் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் தாக்கப்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் சத்தியமூர்த்தி, விஜயன், ராஜேஷ் ஆகிய 3 பேரையும் அவளூர் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News