மின்சாரம் தாக்கி 3 மாடு, 2 ஆடுகள் சாவு
- மின் கம்பி அறுந்து விழுந்து பரிதாபம்
- அதிகாரிகள் விசாரணை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சோமசுந்தரம் நகர் பகு தியை சேர்ந்தவர் துரைக்கண்ணு (53). விவசாயியான இவர் மாடுகளையும் மேய்த்து வருகிறார்.
நேற்று வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 2 பசுமாடுகள் மீது மின்சார கம்பி விழுந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து 2 மாடுகளும் பரிதாபமாக இறந்தன.
இதேபோல புளிய மங்கலம் ஸ்ரீராம் நகர் அறுந்து பகுதியை சேர்ந்த குமார சாமி என்பவரது பசுமாடும் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் பரிதாபமாக இறந்தது.
அரக்கோணம் அடுத்த அணைக்கட்டாபுதூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் 2 செம்மறி ஆடுகள் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்குள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சென்ற 2 ஆடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன.
இதுகுறித்து அந்தந்த பகுதி விஏஓகள் அளித்த தகவலின் பேரில் அரக் கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் நேரில் சென்று விசாரித்து வருகிறார்.