உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

Published On 2022-12-02 10:25 GMT   |   Update On 2022-12-02 10:25 GMT
  • ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சிக்கினர்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம், டிச.2-

அரக்கோணம் சுவால்பேட்டை, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே சந்தேகம் படும்படியாக நின்றிருந்த 2 வாலி பர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News