உள்ளூர் செய்திகள்

மெக்கானிக்கை தாக்கிய 2 பேர் கைது

Published On 2022-10-18 15:12 IST   |   Update On 2022-10-18 15:12:00 IST
  • வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
  • போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை:

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அரிஷ்குமார் (வயது23). இவர், ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் வசூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (19) மற்றும் முருகன் (33) ஆகியோர் சிப்காட் பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதாகி உள்ளதாகவும், அதை சரி செய்ய வேண்டும் என்றும் அரிஷ்குமாரை அழைத்துள்ளார்கள்.

பின்னர் ஏற்பட்ட தகராறில் சீனிவாசன், முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து அரிஷ்குமாரை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News