மக்கள் நீதிமன்றம் மூலம் 16 வழக்குகள் தீர்வு
- ராணிப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது
- ரூ.70 லட்சத்து 26 ஆயிரத்து 500 இழப்பீடு தொகை வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடைபெற்றது.
மக்கள் நீதிமன்றத்திற்கு சார்பு நீதிபதி ஜெயசூர்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி நவீன்துரைபாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் ஆற்காடு அடுத்த மேச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜே.சி.பி. டிரைவர். சத்தியமூர்த்தி (28) கடந்த ஆண்டு ஆற்காடு - செய்யாறு சாலையில் மோட்டார் சைக்கிளில்சென்ற போது எதிரே வந்த கார் மோதி விபத்தில் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக இழப்பீடு கேட்டு சத்தியமூர்த்தியின் குடும்பத்தினர் ராணிப்பேட்டை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இன்சூரன்ஸ் நிறுவனம் சத்தியமூர்த்தியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.
மக்கள் நீதிமன்றத்தில் மொத்தமாக 16 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.70 லட்சத்து 26 ஆயிரத்து 500 இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.