உள்ளூர் செய்திகள்

பயறு வகை பயிர்களை வரப்பில்பயிரிடுதல் குறித்த செயல் விளக்கம்

Published On 2023-01-19 09:06 GMT   |   Update On 2023-01-19 09:06 GMT
  • கபிலர்மலை வட்டார உதவி வேளாண் இயக்குனர் ராதாமணி, வேளாண் அலுவலர் அன்புசெல்வி, வேளாண் தொழில் நுட்ப அலுவலர்கள் (அட்மா) தனசேகரன் மற்றும் ஜோதிமணி ஆகியோர் பங்கேற்றனர்.
  • வேளாண் கல்லூரி மாணவர்கள் பயறு வகை பயிர்களை வரப்பில் பயிரிடுதல் குறித்த தகவல்களை செயல் விளக்கத்தின் மூலம் அதன் பயன்களையும் பயிரிடும் முறையையும் விவரித்தனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டா ரத்திற்கு உட்பட்ட பெரிய

சோளிபாளையம் கிரா மத்தில் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூ ரியில் பயிலும் 4-ம் ஆண்டு வேளாண் மாணவர்களால் வரப்பு பயிர் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் கபிலர்மலை வட்டார உதவி வேளாண் இயக்குனர் ராதாமணி, வேளாண் அலுவலர் அன்புசெல்வி, வேளாண் தொழில் நுட்ப அலுவலர்கள் (அட்மா) தனசேகரன் மற்றும் ஜோதிமணி ஆகியோர் பங்கேற்றனர். வேளாண் கல்லூரி மாணவர்கள் பயறு வகை பயிர்களை வரப்பில் பயிரிடுதல் குறித்த தகவல்களை செயல் விளக்கத்தின் மூலம் அதன் பயன்களையும் பயிரிடும் முறையையும் விவரித்தனர். பின்னர் உதவி வேளாண்மை இயக்குனரிடத்தில் விவசா யிகள் மத்தியில் வரப்பு பயிர் குறித்த விழிப்புணர்வு பற்றியும் கேட்டறிந்தனர்.

Tags:    

Similar News