உள்ளூர் செய்திகள்

ரம்ஜான் பண்டிகை எதிரொலி- மேச்சேரி சந்தையில் ரூ.20 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

Published On 2023-04-21 08:49 GMT   |   Update On 2023-04-21 08:49 GMT
  • விவசாயிகள் மேச்சேரி வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
  • செம்மறி ஆட்டு குட்டிகள் ரூ. 1500-க்கு விற்கப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டம் மேச்சேரியில் வார சந்தை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இங்கு வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

விவசாயிகள் மேச்சேரி வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் செம்மறி ஆடுகள் விலை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ செம்மறி ஆடு ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது.

செம்மறி ஆட்டு குட்டிகள் ரூ. 1500-க்கு விற்கப்பட்டது. வெள்ளாடு ரூ.15 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இந்த சந்தையில் ரூ.20 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் 10 கிலோ செம்மறி ஆடு ரூ.5,500 முதல் ரூ.6,500 வரை விற்பனையானது. ஆனால் இந்த வாரம் கிடுகிடுவென விலை உயர்ந்தது.

ரம்ஜானை முன்னிட்டு பிரியாணி ருசிக்கு செம்மறி ஆடுகளே அதிகம் விற்பனையாகும். தேவை அதிகரித்த நிலையில், செம்மறி ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News