உள்ளூர் செய்திகள்

ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாமை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தொடங்கிவைத்து கலந்துகொண்ட காட்சி.

ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம்

Published On 2023-11-23 06:50 GMT   |   Update On 2023-11-23 06:50 GMT
  • உச்சிப்புளி அருகே ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
  • முகாமை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரியமான் கிராமத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயல லிதா மீன்வளப் பல்கலைக்க ழகத்தில் மீன்வளத்தொழில் காப்பகம், தொழில்சார் பயிற்சி இயக்குனரகம் மற்றும் ராமநாதபுரம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழில்நுட்பம் குறித்த ஒரு வாரகால உள்வளாக பயிற்சியை தொடங்கியது.

அதற்கான தொடக்க விழா நேற்று அரியமான் கிராமத்தில் நடந்தது. விழா விற்கு மீன்வளத் தொழில் காப்பக இயக்குநர் முனை வர் நீதிச்செல்வன், தலைமை தாங்கினார். உத விப் பேராசிரியர் கலைய ரசன் வரவேற்றார். ராமநா தபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசு கையில், மீனவர்கள் படகு ஓட்டுநர் உரிமம் பெற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். ராமேசுவரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானி ஆழ்கடல் மீன்பிடிப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக கூறினார்.

பயிற்சியில் ராமேசுவரம் பகுதியை சார்ந்த 20 மீனவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு திறன் மேம்பாட் டுக் கழகம், உதவி இயக்குநர் குமரவேல், உதவி இயக்குநர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கேப் டன் சகாயரெக்ஸ் இயக்கு னரக ஊழியர்களுடன் இணைந்து விழா ஏற் பாட்டை செய்தார். மாணவி கிருத்திகா நிகழ்ச்சியை தெகுத்து வழங்கினார். தானி யங்கி பொறியாளர் சிவ சுடலைமணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News