உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-05-17 07:58 GMT   |   Update On 2023-05-17 07:58 GMT
  • விளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு அரங்கங்களில் நடைபெறுகிறது.

கீழக்கரை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி, சத்தான உணவு வழங்குதல் கீழ்கண்ட நகரங்களில் விடுதிகள் நடைபெற்று வருகிறது.

மாணவர்களுக்கு மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை ராமநாதபுரம், சென்னை, கோவை, உதகமண்டம் விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி உள்பட 17 நகரங்களிலும், மாணவிகளுக்கான விடுதி ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், சென்னை, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை நாகர்கோவில் உள்பட 10 நகரங்களிலும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான முதன்மை விளையாட்டரங்கம் சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி மற்றும் நெல்லை மாணவிகளுக்கான முதன்மை விளையாட்டு மைய விடுதி சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கம் மற்றும் ஈரோடு விடுதிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.

மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 24-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு அரங்கங்களில் நடைபெறுகிறது.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News