உள்ளூர் செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-15 13:52 IST   |   Update On 2022-06-15 13:52:00 IST
  • எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • இதில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம்

முகமது நபியை அவதூறாக விமர்சித்து பேசியதாக கூறி பா.ஜ.க நிர்வாகிகள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட துணை தலைவர் சோமு தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் சந்தைத் திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில செயற்குழு உறுப்பினர் ஜெமிலுன்னிசா, மாநில செயலாளர் நஜ்மா பேகம் ஆகியோர் பேசினர். மாநில துணைத்தலைவர் சுலைமான், பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், செயலாளர்கள் அப்துல் கலாம், ஆசாத், நஜ்முதீன், பொருளாளர் ஹசன் அலி பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

Tags:    

Similar News