உள்ளூர் செய்திகள்

மண்டபம் முகாமில் இலங்கை அகதி தற்கொலை

Published On 2023-09-25 07:38 GMT   |   Update On 2023-09-25 07:38 GMT
  • மண்டபம் முகாமில் இலங்கை அகதி தற்கொலை செய்து கொண்டார்.
  • மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மண்டபம்

திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் கணேசன். இவ ரது மகன் ரிசாந்தன் (வயது 34). இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமை சேர்ந்த பவானி என்பவரை திருமணம் செய்து கொண்டு முல்லை நகரில் வசித்து வந்தார்.

அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்த ரிசாந்தன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது தாய் புவனேஸ்வரியிடம் செல்போனில் விரக்தியுடன் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 23-ந் தேதி வீட்டின் அருகே ரிசாந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மருமகள் செல்போனில் புவனேசுவரிக்கு தகவல் தெரி வித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த புவனேசுவரி மற்றும் குடும்பத்தினர் மண்டபத்திற்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரிசாந்தனின் சகோதரர் சிவனேசன் கொடுத்த புகாரின் பேரில் மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News