உள்ளூர் செய்திகள்

மணல் கடத்தல்; லாரி பறிமுதல்

Published On 2022-06-15 08:30 GMT   |   Update On 2022-06-15 08:30 GMT
  • மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரை வரை தேடி வருகின்றனர்.

கீழக்கரை

திருப்புல்லாணி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து திருப்புல்லாணி கடற்கரை சோதனைச்சா வடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட னர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தினர். லாரி நிற்காமல் சென்றதால் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் லாரியை விரட்டினர். போலீசார் பின் தொடர்வதை அறிந்த டிரைவர் திருப்புல்லாணி நாடக மேடை அருகே லாரியை நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.

லாரியை போலீசார் ஆய்வு செய்த போது 3யூனிட் மணல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் லாரியை திருப்புல்லாணி போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி வந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்

Tags:    

Similar News