- மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க் கும் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.
கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் பாசித் இல்யாஸ் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதா வது:-
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 6 இடங்களில் மினி ஹைமாஸ் விளக்குகள் சில நாட்களுக்கு முன்பு பொருத்தப்பட்டது. அதில் 3 இடங்களில் விளக்கு எரிய வில்லை. கடற்கரை கழிவு கள் கடலில் கலப்பதால் பகுதியில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கழிவுநீர் குழாய்கள் போடப்பட்டும் முறையாக பணி மேற்கொள்ள பபடாமல் உள்ளது.
இனி வரும் காலங்களில் இது போன்று கண்துடைப்பு பணி நடக்காமல் சேர்மன், நகராட்சி கமிஷனர், பொறி யாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.