உள்ளூர் செய்திகள்

தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி

Published On 2023-04-23 09:01 GMT   |   Update On 2023-04-23 09:01 GMT
  • ராமநாதபுரம் நகரில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
  • இந்த தடையை தவிர்க்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகர் பட்டணம் காத்தான் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில்10-க்கும் மேற்பட்ட முறை குறைந்தது 5 நிமிடம் முதல் 10நிமிடங்கள் வரையும், சில நேரம் அரை மணி நேரத்திற்கு மேலாகவும் மின்தடை ஏற்படுகிறது.

கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வீடுகளில் மக்கள் சிரமப்படுகின்றனர். பகல் நேரத்தில் இது போல் ஏற்படும் மின்தடையால் வணிக நிறுவனங்களில் தொழில் பாதிக்கப்படுகிறது.

காலை நேரத்தில் பணிக்குச் செல்லும் போது ஏற்படும் மின்தடையால் உணவுகளை தயார் செய்ய முடியவில்லை என்றும், பெண்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.

இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமிழந்து அவதிப்படுகின்றனர்.மின்வாரியம் முறையாக மின்சாரம் வழங்கவும் இந்த தடையை தவிர்க்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News