உள்ளூர் செய்திகள்

கால்நடைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்து மாவு

Published On 2023-04-13 08:24 GMT   |   Update On 2023-04-13 08:24 GMT
  • கால்நடைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்து மாவு இலவசமாக வழங்கப்பட்டது.
  • யோகம் தொண்டு நிறுவனத்தின் டிரஸ்டி தமயந்தி தலைமை தாங்கினார்.

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் யோகம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கால்நடைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்து மாவு இலவசமாக வழங்கப்பட்டது. இதில் செங்கப்படை, புதுக்கோட்டை, ஒ.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டு இயற்கை ஊட்டச்சத்து மாவை பெற்றுக்கொண்டனர். மேலும் இந்த மாவின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து, விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு யோகம் தொண்டு நிறுவனத்தின் டிரஸ்டி தமயந்தி தலைமை தாங்கினார். தனியார் சோலார் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி ஜெனார்தனன், தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் யோகேஷ் மணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதவள மேம்பாடு சபரீஷ், வழக்கறிஞர் அப்துல்சமதுசேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News