உள்ளூர் செய்திகள்

ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய வாரச்சந்தை -அமைச்சர் திறந்து வைக்கிறார்

Published On 2023-10-15 13:25 IST   |   Update On 2023-10-15 13:25:00 IST
  • ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய வாரச்சந்தையை அமைச்சர் திறந்து வைக்கிறார்.
  • முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் மாலதி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் பகுதியில் வாரச்சந்தை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இது தொடர்பாக அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் அவர்கள் மனு அளித்தனர். இதை தொடர்ந்து முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே ரூ.2 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார். இந்த வாரச்சந்தை கட்டி முடிக்கப்பட்டு செயல்பட தயாராக உள்ளது.

இந்த நிலையில் இதன் திறப்பு விழா நாளை 16-ந்தேதி நடக்க உள்ளது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு வாரச்சந்தையை திறந்து வைக்க உள்ளார். முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் மாலதி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Similar News