உள்ளூர் செய்திகள்

நடுக்கடலில் ரூ. 1.50 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

Published On 2023-11-05 08:46 GMT   |   Update On 2023-11-05 08:46 GMT
  • நடுக்கடலில் ரூ. 1.50 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • இலங்கையை சேர்ந்த 5 பேர் கைது.

ராமேசுவரம்

இலங்கை தலைமன்னார் வழியாக ராமேசுவரத்திற்கு தங்கம் கடத்தல் நடைபெற உள்ளதாக தலைமன்னார் கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, கடற் படையினர் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்ட னர். அப்போது சந்தேகத் திற்கு இடமாக ராமேசுவரம் நோக்கி சென்ற படகை இடைமறித்து சோதனை யிட்ட போது அதில், 2 கிலோ 150 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, தலை மன்னார் கடற்படை முகா மிற்கு படகு மற்றும் அதில் இருந்து 5 பேரை கைது செய்து மேல் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தலை மன்னார் பகுதியை சேர்ந்த வர்கள் என்பதும் தங்கத்தை நடுக்கடலில் தமிழக படகில் கொடுக்க கொண்டு செல் லப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந் துள்ளது. இது குறித்து தொடர்ந்து இலங்கை கடற் படையினர் மற்றும் போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த தங்கத்தை நடுக்கடலில் யாரிடம் கொடுக்க கொண்டு செல் லப்பட்டது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் ரகசிய விசாரணையில் ஈடு பட்டுள்ளனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1.50 கோடி மதிப்பு இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.

Tags:    

Similar News