உள்ளூர் செய்திகள்

இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

Published On 2023-06-19 08:12 GMT   |   Update On 2023-06-19 08:12 GMT
  • கமுதி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
  • காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து வெற்றி இலக்கை நோக்கி சென்றது.

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முஷ்டக்குறிச்சி கிராமத்தில் பெத்தனாச்சி அம்மன் கோவில் வருடா பிசேக விழாவை முன்னிட்டு 3 பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

பந்தயத்தில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து வெற்றி இலக்கை நோக்கி சென்றது.

இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 51 மாட்டு வண்டிகள் பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முதல் 3 இடங்களை பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம் நினைவு பரிசுகள் வழங்கபட்டது.

4-ம் இடம் பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களூக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கபட்டது.இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை சுற்றுவட்டார கிராமத்தினர் ஏராள மானோர் கண்டுகளித்தனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News